Tuesday, 25 September 2018

தேமல் நீங்குவதற்கு tamil maruthuva kurippu/nature health tips in tamil

1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?
முகப் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய, முகப்பரு நீங்க, கண்ணில் கருவளையம் நீங்க, தோல் வியாதிகள் குணமாக, உடல் பொன்னிறமாக, பற்கள் வெண்ணிறமாக என இதோ உங்களுக்கு உதவும் அழகுக் குறிப்புகள் அனைத்தும் இங்கே!

2. மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.

3. தோலில் சொறி, சிரங்கு, புண் இவற்றால் கரும்புள்ளிகள் உள்ளதா? கரும்புள்ளிகள் நீங்க குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர வேண்டும். ஒரு மாதத்திற்கு இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும். அழகு கூடும். ”குப்பை மேனி” இருந்தால் மேனியின் கரும்புள்ளிகளுக்கு நீங்கள் சொல்லலாம் ”குட்பை”.

4. பொன்னாங்கண்ணிக் கீரை நமது உடம்பை ”பொன்னாக” மாற்றும் சக்தி இதற்கு உண்டு. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய் விட்டு வதக்கி, மிளகும், உப்பும் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடல் அழகு பெறும்.

Saturday, 22 September 2018

மூலிகை பொடிகளின் பயன்கள் tamil maruthuva kurippu/nature health tips in tamil






       
milagai podi






1. அருகம்புல் பொடி  = அதிகமான உடல் எடையை குறைக்கும்.   கொழுப்புகளை குறைக்க கூடியது. நல்ல ரத்தத்தை சுத்திகரிக்க கூடியது.

2.  நெல்லிக்காயின் பொடி  =  பற்களும்  , எலும்புகளும்,  பலமாக இருக்கும்.  இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.

3. வில்வம் பொடி   =   ரத்த கொதிப்புக்கு சிறந்தது . கொழுப்பையும் குறைக்க கூடியது.

4. வல்லாரை பொடி  =  நினைவாற்றல் , நரம்பு  தளர்ச்சிக்கு நல்லது .

5. துளசி பொடி =  மூக்கடைப்பு , சுவாசத்தில் ஏற்படும்  கோளாறுகளுக்கு  சிறந்தது .

6. ஆவாரம்  பூ பொடி =   இதயம் பலமாக இருக்கும். மேனி பொன்னிறமாக மாறும்.

7. ரோஜா பூ பொடி  =   உடல் குளுர்ச்சிக்கும் ,  ரத்த கொதிப்பிற்கும்

8. ஜாதிக்காய் பொடி = நரம்பு தளர்ச்சி,  ஆண்மை பெருகும்.

9. வேப்பிலை பொடி =  குடிலில் உள்ள புழுக்கள் அழிக்கும்.  சர்க்கரை நோய்க்கும் மருந்தாக பயன் தரும்.

10. அதிமதுரம் பொடி =  வறட்டு இருமல் ,  குரல் வளத்திற்கும்  சிறந்தது .

11. கிரிசாலக்கண்ணி பொடி  =  காமாலை போக்கும் . கூந்தல் வளரும்.

12.  கீழா நெல்லி பொடி  =  மஞ்சள் காமாலை,   சோகை தனம் நீங்கும் .

13. பொன்னாக்கன்னி பொடி =  உடல் சூட்டை குறைக்கும்.  கண் சம்மந்தமான நோய்கள் தீரும்.

14.  வாழை தண்டு பொடி  =  கல் அடைப்புக்கும்,  சிறுநீரக நோய்க்கும் பலன் தரும்.

15. மணத்தக்காளி பொடி  =  வாய் புண் , தொண்டை புண்,  நீங்கும்.

16. மருதாணி பொடி =  கை , கால் , ஆகியவற்றில் பூசினால் பித்தம் , கபம் , குணமாகும் .

17. சோற்றுக்கற்றாழை  பொடி  =  முகம் பொலிவாகவும்,  உடல் குளிர்ச்சி ஆகவும் இருக்கும்.

தூது வளையின் மருத்துவ குணங்கள் tamil maruthuva kurippu/nature health tips in tamil



1. பசி எடுக்காதவர்கள்  இந்த கீரையை நெய் விட்டு வதக்கி அரைத்து  உணவில் சேர்த்து வந்தால் பசி தானாக எடுக்கும்.


2. இதனால் தலை பாரம், உடல் வலி , ஆகியவை நீங்கும்.

3.  துளசி சாரும் தூதுவளை  சாரும் சேர்த்து , 1 டம்ளர் பாலில் கலந்து ஒரு வரம் அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய், சளி , நீங்கும்.

4.  இந்த கீரை முக வசீகரம் ,  புத்தி தெளிவு உண்டாக்க கூடியது.

5.  வாய்வு நோய்களையும் சீர் படுத்த கூடியது தூது வளை .

Friday, 21 September 2018

எருக்கன் செடியின் மூலிகை பயன்கள் tamil maruthuva kurippu/nature health tips in tamil





vella earakku
1. தெய்வீக மூலிகை என போற்றப்படும் எருக்கு வளமற்ற நிலங்கள்
பராமரிக்கப்படாத வயல்கள் , சாலைஓரங்கள் , சுடுகாடு என எங்கும் விளையும்.

2. பனிரெண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும் கூட உயிர் வாழும் ஆற்றல் கொண்டது.

3. எருக்கின் இலை பூ, பட்டை, வேர் , என அனைத்திலும் மருத்துவ குணங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
இதன் இலை விஷ முறிவுக்கு பயன்படுகிறது .

4. 10 கிராம் இஞ்சி , வெள்ளெருக்கு பூக்கள் , 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி  1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு , 1/4 லிட்டர் ஆகும் வரை சுண்ட காய்ச்சி தினமும் இரண்டு வேலை குடித்து வந்தால் இரைப்பு குறையும்.

5. எருக்கன் பூவை காயவைத்து பொடியாக்கி கொள்ளவேண்டும். இந்த பொடியில் 200 கிராம் எடுத்து சிறது சர்க்கரை சேர்த்து இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் பால்வினை நோய், தொழு நோய் குணமாகும்.

6. எருக்கன் பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து .

இளநீரின் மருத்தவ குணம் tamil maruthuva kurippu/nature health tips in tamil



இளநீரில் உள்ள சத்துக்கள்

1.சோடியம் குளோரைடு
2. பொட்டாசியம்
3. தாது உப்புகள்                                  
4. நீர் சத்து
5. கால்சியம்
6.  வைட்டமின்

பயன்கள்
தினமும் இளநீர் சாப்பிட்டு வந்தால் அது நம்மை இளமையாக  வைத்து இருக்கும்.     இளநீரில் இருக்கும் உப்பு சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு மட்டுமின்றி உடலின் வெப்ப நிலையை உள்வாங்கி  சரிவர வெளியே தள்ளுகிறது .  குறிப்பாக கோடை காலத்தில் நல்ல பலன் கொடுக்க கூடியது .

இதய நோயாளியாளிகளுக்கு நல்ல இதமானது இளநீர்.

அத்தி பழத்தின் மருத்துவ குணங்கள் tamil maruthuva kurippu/nature health tips in tamil



அத்தி பழத்தின் சத்துக்கள்

1. நார்சத்து   5.8%
atthi palam
அத்தி பழம்

2. பொட்டாசியம்  3.3%                    

3. மாங்கனீசு  3%

4. வைட்டமின் பி6  3%

5. கால்சியம் 300 மில்லி கிராம்

6. இரும்பு 2 மில்லி கிராம்

7.புரதம் 2 கிராம்


பயன்கள்


1. அத்தி பட்டை, பிஞ்சு, காய், ஆகியவை சதை , நரம்பு , ஆகியவற்றை சுரங்க செய்யும் மருந்தாகவும் , பழம் மலமிளக்கியாகவும் ,  பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் பயன்படும்.<
2. அத்தி பால் 15 மில்லியுடன் வெண்ணை , சர்க்கரை கலந்து காலை மாலை கொடுத்து வர நீரழிவு , குருதி கலந்த வயிற்றுபோக்கு , பெரும்பாடு , சிறுநீரில் குருதி கலந்து போதல் , நரம்பு பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

3. அத்தி பழத்தை உலர்த்தி இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி காலை மாலை பாலில் உட்க்கொண்டாள் இதயம் வலுவாகும்.  ரத்தம் பெருகும்.

வாழையின் பயன்கள் : tamil maruthuva kurippu/nature health tips in tamil





வெப்பம் மிகுந்த ஈரமான கால நிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன . இதற்கான நிலப்பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும் .

வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும் அது மற்ற வெப்ப மண்டல ஆப்பிரிக்கா தென் அமெரிக்க போன்றவற்றிற்கு பரவியது.

வாழை பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்ச நிலையில் நிற்பது நமது இந்தியாதான்.

வாழையின் மற்றுஒரு சிறப்பு என்னவென்றால் வாழை மரத்தின் அணைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது.   பூ இலை , காய், தண்டு, கனி, நாற்பகுதி, என்று எதுவும் வீணாகாது.

வாழையின்  பயன்கள் :

1.  வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும்.

3. காயம் தோல் புண்களுக்கு தேங்க எண்ணையை துணியில் நனைத்து  புண் மேல் தடவி வாழை இலையை  மேலே கட்டினால் புண் விரைவில் குணமாகும்.
4.  சோரியாசிஸ்  தோல் அழற்சி கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில வாழை இலையை கட்டினாள் குணமாகும்.

5. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லஎண்ணை  பூசி வாழை இலையில் படுக்க வைத்து காலை சூரிய ஒளியில் கிடத்தினாள் வைட்டமின் டீ கிடைத்து , குழந்தைகள் குளுமையுடனும்  ஆரோக்கியமாகவும் இருக்கும் .

Thursday, 20 September 2018

முதுகு வலி குறைய latest tamil maruthuva kurippu/nature health tips in tamil


vettrili

   
1.  மிளகு, கிராம்பு மற்றும் சுக்கு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து தினமும் 2 வேளைகள் குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.

2. வெற்றிலைகளை எடுத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி மற்றும் முதுகு வலி குறையும்.

3. வாதநாராயணன் இலைகளை  எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி முதுகில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலி குறையும்.

உடல் எடை குறைய எளிமையான வழிகள் tamil maruthuva kurippu/nature health tips in tamil


pappaya




1. பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


சுக்கை தோல் நீக்கி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 500 மி.லி இளநீர் விட்டு 12 மணி நேரம் ஊற வைத்து சுக்கை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும். மிளகை தூய நீரில் போட்டு கழுவி எடுத்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி பசும்பாலை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.

திப்பிலியை தூய நீரில் கழுவி மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி எடுத்து நன்றாக இடித்து சலித்து கொள்ளவும்.

அதிமதுரத்தை ஒன்றிரண்டாக தட்டி மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி தூய நீர் விட்டு நீர் பாதியளவு சுண்டும் அளவுக்கு எரித்து அதிமதுரத்தை எடுத்து நிழலில் உலர்த்தி நன்றாக இடித்து சலித்து கொள்ளவும்.
நிலவேம்பை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு புழுங்கலரிசி கழுநீரை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
இந்துப்பை இடித்து கொள்ளவும்.

இடித்து சலித்து வைத்த அனைத்தையும் ஒரு மண் பானையில் போட்டு நன்கு கலந்து மண் தட்டால் மூடி பானையை 6 மணி நேரம் கடும் வெயிலில் வைத்து எடுத்து மீண்டும் நன்றாக கலந்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.


உபயோகிக்கும் முறை:


6 கிராம் அளவு மருந்தை 3 பங்காக பிரித்து காலை, பகல், இரவு என 3 வேளைகள் உணவுக்கு 1 மணி நேரம்முன்னதாக ஒவ்வொறு பங்கை சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வரவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
இந்த சூரணத்தை சாப்பிட போகும் ஒரு நாள் முன்னதாக சுகபேதி அருந்தவும். சுகபேதி அன்று மட்டும் பசும்பாலும், சோறும் அல்லது மோரும் சோறும் மட்டும் சாப்பிடவும். அடுத்த நாள் மருந்தை சாப்பிடவும்.
சாப்பிட கூடாதவை:

இந்த சூரணம், சாப்பிட்டு வரும் போது உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கடலை பருப்பு, மொச்சை, அகத்திக்கீரை, பூசணி, பரங்கிக்காய், பச்சரிசி, குளிர்ந்த பானங்கள், இறைச்சி வகைகள், பிஸ்கட் வகைகள், தயிர், இளநீர் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.
சாப்பிட கூடியவை:

மிளகு பொங்கல், துவரை,முளைக்கீரை, புளி, மிளகாய், துவரை, புழுங்கலரிசி, சாம்பார், மோர், வத்தக்குழம்பு ஆகியவற்றை சாப்பிடலாம். வெந்நீர் குடித்து வருதல் மற்றும் வெந்நீர்ல் குளித்து வருதல் மிகவும் சிறந்தது.

குறிப்பு:


இந்த மருந்து சாப்பிடும் நாட்களில் 3 முறைகளுக்கு மேல் மலங்கழிந்தால் ஒவ்வொறு வேளை மருந்துடனும் அரை தேக்கரண்டி தேனை கலந்து கொள்ளவும்.

மலச்சிக்கல் ஏற்படாது. அப்படி ஏற்பட்டால் உணவில் சிறிது கீரைகளை கூட்டி சாப்பிடவும்.

உதடு சிவப்பாக மாற tamil maruthuva kurippu/nature health tips in tamil



lemon
எலுமிச்சை 



1.கடுகு, எலுமிச்சை பழச்சாறு, ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவவும்.


2. கடுகு, எலுமிச்சை பழச்சாறு, ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

3.புதினா, கொத்தமல்லி இலையை  அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

ஏலக்காய் பலவிதமான பயன்கள் tamil maruthuva kurippu/nature health tips in tamil




ellakkai
ஏலக்காய்




மருத்துவக் குணங்கள்:




1.பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம். ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.


2.நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

3.வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

4. சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.
இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

5. ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.
ஈரப்பதம் புரதம் மாவுப்பொருள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.

6. ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி.
இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

7.நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள் ஏலக்காய் இதன் காரணத்தால் மருந்துத் தயாரிப்பாளர்கள் பலரும் பயன்படுத்தி நோய்கள் விரைந்து குணமாகவும் உடலுறுப்புகளை தூண்டிவிடவும் பயன்படுத்துகின்றனர்.

8.நாம் குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.

9. ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும்.


10.இதே போல ஏலக்காயை ‘சூயிங்கம்’மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.சிலர் வாயிலிருந்து முடை நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாத படி வாய் நாற்றம் தூக்கி அடிக்கும். இவர்களும் ஏலக்காய் மெல்லலாம்.

11.நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

12.அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5, 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.

Wednesday, 19 September 2018

யோகாவின் நன்மைகள் tamil maruthuva kurippu/nature health tips in tamil




விரல்களின் முத்திரையில் வியாதிகள் தீரும்


நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம். இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.


yoga muthira



கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன. சிந்தனைச் சக்தி தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும்

. தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும். மூட்டு வலி குணமாக வாயு முத்திரை! மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும். இதன்படி தியானம் செய்தால் வலிகள் குணமாகும். 

காது நன்கு கேட்க! காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும். சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை! மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். 


உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும். இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை! இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள்,

 உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும். கொழுப்பு கரைய சூரிய முத்திரை! உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும். கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை! நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். 

கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும். 

எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ தேவையில்லை. இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும், மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும். 

எண்ணெய் வகைகள் tamil maruthuva kurippu/nature health tips in tamil

எண்ணெய் வகைகள்

கற்பூரத் தைலம்

தேவையான பொருட்கள்:

கற்பூரம்.
தேங்காய் எண்ணெய் அல்லது
நல்லெண்ணெய்.
செய்முறை:

ஓர் அவுன்ஸ் கற்பூர பொடியை நான்கு அவுன்ஸ் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து நன்கு கலக்கினால் கற்பூரத் தைலம் ஆகிவிடும்.
உபயோகிக்கும் முறை:

இந்த தைலத்தை பத்து பதினைந்து நொடிகளில் நன்கு அழுத்தித் தேய்த்து வரவேண்டும்.
தீரும் நோய்கள்:

வாதம், முளிகளில் உண்டாகும்  வலி ஆகியவைகள் குறையும்.

கரன் எண்ணெய்

தேவையான பொருட்கள்:

ஆளி விதை எண்ணெய்.
சுண்ணாம்பு நீர்.
செய்முறை:

ஆளி விதை எண்ணெய், சுண்ணாம்பு நீரும் சேர்த்துக் குலுக்கினால் கரன் எண்ணெய் ஆகிவிடும்.
தீரும் நோய்கள்:

நெருப்புப்பட்ட புண்களுக்கு இந்த எண்ணெயை போட்டு வந்தால் தீப்பட்டப் புண்கள் குறையும்.

ஆமணக்கு

  மருத்துவக் குணங்கள்:

ஆமணக்கு மரம் 5 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. மடல்களைக் கொண்ட இதன் இலைகள் பெரியதாக அகலமாக இருக்கும். இதன் கொட்டைகள் சாம்பல், கறுப்பு அல்லது பல நிறத்துடன் கோழி முட்டை வடிவில் இருக்கும். இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ முதலான நாடுகளில் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது.

கை வடிவமான பெரிய மடல் போன்ற இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இவை பெரிதாகவும், அகன்றும், மேற்பகுதி வட்டமாகவும், தாவரத்தின் நுனியில் பெரிய கொத்தாகவும் காணப்படும். சாம்பல் நிறமான பூச்சுடைய, பத்து அடி வரை உயரமாக வளரக்கூடிய தாவரம்.

எளிதில் உடையக்கூடிய தண்டை உடையது. முட்களுடன் கூடிய காய்கள் காய்க்கும். இவை காய்ந்தால் வெடிக்கும் தன்மையுடையது. பழங்கள் கூர்மையான ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. விதைகள் நீள்வட்டமானவை. ஏரண்டம், சித்திரம், தலரூபம் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஆமணக்கிற்கு உண்டு.

கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும். ‘சித்திரகம்’, ‘ஏரண்டம்’ என்பன இதன் வேறுபெயர்களாக நிகண்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.
குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். ஆமணக்குச் செடியின் முக்கியப் பயன்பாடாக அமைவது இதன் காய்கள்தான். காய்கள் பச்சை நிறமாக இருக்கும். அவை முற்றியதும் வெளிறிய வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும்.

ஆங்காங்கே கூர்மையாக முள் போன்று இருக்கும். வெயிலில் காயப்போட்டால் காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிப்படும். இவ்விதைகளையே, ‘ஆமணக்கு முத்து’, ‘ஆமணக்கங் கொட்டை’ என்பர். இவ்விதைகளிலிருந்தே விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இதன் கொட்டை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்காக (முத்துக்கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய்) வயல்வெளிகளின் ஓரங்களிலும் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலும் வளர்க்கப்படுகிறது. விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது.

இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை. இதில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செவ்வாமணக்கு ஆகிய மூன்று முக்கிய வகைகள் உள்ளன.

இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை கசப்பு சுவையும், வெப்பத்தன்தையும் கொண்டவை. இலையானது வீக்கம், கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும் தாய்ப்பால் பெருக்கும். வேர், வாத நோய்களைக் குணமாக்கும். விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றை போக்கும்.

எண்ணெய் மலமிளக்கும், வறட்சியகற்றும். பச்சிளம் குழந்தைகளை தாய் போல வளர்க்கும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விளக்கெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் ஆமணக்கு முத்து, மன்னராட்சிக் காலத்தில் வரிவிதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதை, ‘ஆமணக்கங் கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி (பெரிய மூடை) ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் (சிறிய மூடை) ஒன்றுக்குக் காசு காலும்’ என்று கி.பி. 1300ஆம் ஆண்டு பிரான்மலைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

பதநீரைக் காய்ச்சிக் கருப்பட்டி தயாரிக்கும்போது, பொங்கிவரும் பதநீர் கீழே வடியாமல் தடுக்க, பதநீர் பொங்கும்போது, ஆமணக்கு முத்துகளைப் போடுவர். இதனால் பாத்திரத்தின் விளிம்பிற்கு வெளியே பதநீர் வராது.
திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனையிலும் கோட்டைகளிலும் இரவில் எரியும் தீப்பந்தங்கள் விளக்கெண்ணெய் ஊற்றியே எரிக்கப்பட்டன என்றும் தேவையான எண்ணெயை இலவசமாக வழங்குவது குடிமக்களின் பொறுப்பு என்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலியார் ஓலைகள் குறிப்பிடுகின்றன.

கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்றவை பயிரிடும்போது, வரப்பைச் சுற்றிலும் ஆமணக்கு முத்துகளை ஊன்றிவைப்பர். காற்றைத் தடுக்கும் வேலி போல் இது அமையும். மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர்.

ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையிலேயே இவ்வாறு வளர்க்கின்றனர். யோனா என்ற தீர்க்கதரிசிக்கு நிழல் தருவதற்குப் பயன்படும்படி ஆமணக்குச் செடியை ஆண்டவர் வழங்கியதாக விவிலியம் குறிப்பிடுகிறது.

ஆமணக்கு முத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெ யானது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. இதன் வழவழப்பான தன்மையினால் மசகு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது, மாட்டு வண்டிகளில் சக்கரங்கள் சுழலும்போது, அச்சுப் பகுதியில் ஏற்படும் உராய்வைத் தடுக்க, வைக்கோலை எரித்து அதன் சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து மைபோலாக்கி அச்சுப் பகுதியில் தடவுவர்.

இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ‘கிரிஸ்’ ஆகும். இவ்வழவழப்புத் தன்மை யின் காரணமாகத்தான் பால் கறக்கும்போது, மாட்டின் மடுக்காம்புகளில் விளக்கெண்ணெயைத் தடவுவது வழக்கம். இதனால் மாட்டின் மடுவிலுள்ள காம்புகளில் கீறலோ வடுவோ விழுவது தடுக்கப்படும்.
விளக்கெண்ணெயின் வழவழப்புத் தன்மையின் அடிப்படையில் எதிலும் உறுதியான முடிவெடுக்காமல் இருப்போரைக் குறிக்க ‘சரியான விளக்கெண்ணெய்’ என்னும் சொல்லாட்சி இன்றும் வழக்கிலுள்ளது.

பூ வைகைகளின் பயன்கள் flowers benifits tamil maruthuva kurippu/nature health tips in tamil





தாழம்பூ மணப்பாகு








                                     
health pro flowers




தேவையான பொருள்கள்:


தாழம் பூ  
நீர்
சர்க்கரை
செய்முறை:

தாழம்பூவை  சிறியதாக நறுக்கி நீர் விட்டு காய்ச்ச வேண்டும்.
நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பாகுபாதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
இதேபோன்று தாழம்பூ வேரினை பயன்படுத்தியும் செய்யலாம்.
மருத்துவக்குணங்கள்:

இவ்வாறு தாழம்பூ மணப்பாகினை அருந்துவதால் உடல்சூடு தணியும். பித்தம் குறையும் அதிகளவில் சிறுநீர் வெளியாவதை  தடுக்கலாம்.
தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வந்தால் அம்மைநோய் வராமல் தடுக்கலாம்.

தாழம்பு வேரினை கொண்டு தயாரித்த மணப்பாகினை உட்கொள்வதால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

பூவரசம் பூ


இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம் பூக்கள் எண்ணற்ற மருத்துவக்குணங்களைப் பெற்றுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பூச்சிக்கடி மற்றும் வண்டுக்கடி போன்ற விஷக்கடிகளுக்கு இந்த பூக்களைப் பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


  மருத்துவக்குணங்கள்

தோல் சம்பந்தமான நோய்கள் குணமாக:

தோல் ‌நோயினால் அவதிப்படுபவர்கள் பூவரசம் பூவை நன்கு அரைத்து அவற்றின் மீது தடவினால் தோல்நோய் குணமாகும்.
விஷக்கடி குணமாக:

பூச்சிக்கடி, வண்டுக்கடி போன்ற விஷப்பூச்சிகள் கடிப்பதால் உண்டாகும் தோல்சம்பந்தமான  நோய்கள் குணமாக வேண்டுமெனில் பூவரசம் பூவை 25 கிராம அளவு எடுத்து நன்கு அரைத்து  அதில் 200 மிலி நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின் நீர் பாதியாக வற்றியவுடன் அ‌தனை வடிகட்டி தொடர்ந்து மூன்று ந‌ாளைக்கு காலை, மாலை என இருவேளை பருகி வந்தால் தோல்சம்பந்தமான நோய்களான ஊறல், தடிப்பு, அரிப்பு, வீக்கம், மயக்கம் மற்றும் சோம்பல் ஆகியவை குணமாகும்.
குறிப்பு:

இவ்வகையான கஷாயத்தை உட்கொள்ளும்போது எண்ணெய், கடுகு போன்றவற்றை போட்டு தாளிக்காமல் சாப்பிட வேண்டும். மேலும் மீன் கருவாடு போன்றவற்றை சாப்பாட்டில் சேர்க்கக்கூடாது.
மூட்டுவீக்கம் குணமாக:

 மூட்டு வீக்கத்தால் துன்பப்படும் வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் பூவரசம் பூ, காய், பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் மூட்டு வீக்கம் குணமாகும்.
இத்தகைய மருத்துவக்குணங்களைப் பெற்ற இந்த “பூவரசம் பூவை” நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக உண்போம்; உலகில் நோயின்றி வாழ்வோம்.


துத்திப்பூ

துத்திச்செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இவை இரத்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கி நெஞ்சுக்கு இதம் தரும்.

 மருத்துவக்குணங்கள்

ஆண்மை பெருகும்:

துத்திப்பூக்களை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் இரத்தம், சிறுநீரில் இரத்தம் ஆகியவற்றை குணமாக்கும்.
மேலும் ஆண்மையை பெருக்கும்.
ஆஸ்துமாநோய் குணமாக:

துத்திப்பூக்களை காம்பு நீக்கி நிழலில் உலர்த்தி சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து அரைதேக்கரண்டி அளவு சூரணத்தை காலை, மாலை பாலில் கலந்து பருகினால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
காசம் என்ற எலும்புருக்கி நோய் குணமாகும்.
மூலநோய் குணமாக:

ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வந்தால் மூலநோய் குணமாகும்.
ரத்தவாந்தி குணமாக:

அரைக் கைப்பிடியளவு துத்திப்பூக்களை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதனை இறக்கி வடிகட்டி நான்கு மணிக்கு ஒருமுறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.

இத்தகைய நன்மைகள் வாய்ந்த இந்தப்பூக்களை நாம் நம் அன்றாட உணவுடன் ‌கலந்து உண்போம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.



ரோஜா
மருத்துவக் குணங்கள்:

பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத் தந்து மகிழ்விக்கும்.

மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.

அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.

இலைச் சாறுகளின் மருத்துவக்குணங்கள் tamil maruthuva kurippu/nature health tips in tamil

இலைச் சாறுகளின் மருத்துவக்குணங்கள்






               
health pro 








1. அருகம்புல் சாறு அருகம்புல் சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து இரண்டு வாழைப்பழகங்களுடன் ஒருவேளை உணவை முடித்துக்கொள்ளவேண்டும். எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு புதிதாக க்ளுகோஸ் வாட்டர் ஏற்றியது போல் உடலுக்குப் புது இரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சத்துக்களை அளிக்கிறது.இரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது. அருகம்புல் பச்சையம் இரத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த விருத்தியை உண்டாக்கிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. ஆஸ்துமா, இரத்த அழுத்தம் ஆகியவைகளை குறைக்கிறது. தாய்பால் அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை குறையும்.

2. துளசி இலைச்சாறு காய்ச்சல், இருமல், ஜீரணக் கோளாறுகள், ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி ஆகியவைகளை நீக்கி இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது.

3. தூதுவளை இலைச்சாறு மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும், மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும், தோல் நோய்கள் மறையும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு உடல் தங்கம் நிறமைடயும், கண்கள் நல்ல பார்வை பெறும். மூளைக்குச் சுறுசுறுப்பைத் தந்து அறிவு தெளிவு ஏற்படும்.காமாலை தீரும், மலச்சிக்கல் நீங்கும்.

4. பொன்னாங்கண்ணி இலைச்சாறு உடலுக்கு வலு ஊட்டுவதோடு பொன்போல் பளபளக்கும் தன்மையை அளிக்கும், கண்ணொளி அதிகரிக்கும் வாதநோய்கள் மறையும், உடல் சூடு குறையும்.

5. வல்லாரை இலைச்சாறு நினைவாற்றல் வளரும், நரம்புத் தளர்ச்சி அகலும், வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும், தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும். இதயம் வலுவாகும்.

6. வில்வ இலைச்சாறு காய்ச்சல் குறையும், நீரழிவு குறையும், வயிற்றுப்புண்கள் ஆறும், நல்ல பசி எடுக்கும், மந்த புத்தி மாறும், மஞ்சள் காமாலை நீங்கும், காலாரா குறையும்.

7. முசுமுசுக்கை இலைச்சாறு தொடர்ந்த இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் குறையும். நுரையீரல் நோய்கள் குறையும்.

8. புதினா இலைச்சாறு வாய்ப்புண், வயிற்றில், குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். புற்றுநோய்கள் குறையும், வெண்குஷ்டம் குறையும்.

9. நெல்லிக்காய் சாறு தலைமுடி உதிர்வது குறையும், தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள் குறையும், நன்கு பசிக்கும்,  இதயநோய்கள் குறையும், நீரழிவு நோய் குறையும், உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்.

10. வாழைத்தண்டுச் சாறு சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும், இரத்த அழுத்தம் குறையும், தொந்தி குறையும், அமிலத்தை குறைக்கும், உடல், கை, கால் வீக்கம்  குறையும், பாம்புக்கடி, வண்டுக்கடி நச்சுக்கள் குறையும், இரத்தம் சுத்தமாகும்.

11. சாம்பல் பூசணிக்காய் சாறு பெண்களுக்கு மாதவிடாய் நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், வயிற்றுப்புண்கள், அமிலத்தைக் குறைக்கும்.
கேரட் சாறு கண்பார்வை ஒளி  பெறும், கண்நோய்கள், பல்நோய்கள் குறையும், அமிலத்தைக் குறைக்கும்.

12. அரச இலைச்சாறு மலச்சிக்கல், உடல் சூடு, கர்ப்பப்பை நோய்கள் குறையும், காம உணர்வுகளைத் தூண்டச் செய்யும்.

13.பூவரசு இலைச்சாறு காலரா, தொழுநோய், தோல் நோய்கள் குறையும்.
கொத்தமல்லிசாறு பசியைத் தூண்டும், பித்தம் குறையும், வாத நோய் குறையும், காய்ச்சல் குறையும், மூலம், காய்ச்சல், சளி, இருமல், வாதம் குறையும்.

கீரைகள் tamil maruthuva kurippu/nature health tips in tamil



கீரைகள்

சில தாவரங்களின் இலைப்பகுதியை நாம் உணவாக சாப்பிட்டு வருகிறோம். இவற்றை தாம் “கீரைகள்” என்று கூறுவர். கீரைகள் பொதுவாக அனைவரும் சாப்பிடும் உணவு ஆகும். இருப்பினும் அதை சரியாக எடுக்காமலும் இருக்கின்றனர். தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான நோய்களும் நம்மை நெருங்காது. உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது. கண்களுக்கு மிகவும் சிறந்தது. எல்லா விதமான கீரைகளிலும் ஒவ்வொறு விதமான மருத்துவ குணங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

                                                                           
greens

கீரைகளின் மருத்துவ குணங்கள்:

வெந்தயக்கீரை:

வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்டது.
இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.
முருங்கைக்கீரை:

இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும்.
இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கும். இரத்தச்சோகைகளை குறைக்கும்.
அரைக்கீரை:

அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.
இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் காணப்படும். தேமல், சிரங்கு, சொறி போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சிறுகீரை:

உடலுக்கு ஊக்கத்தை தந்து தளர்ச்சியை போக்க வல்லது. குடல் புண்கள் மற்றும் குடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கல் குறையும்.
இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலில் அதிக பித்தத்தை குறைக்கும்.
அகத்திக்கீரை:

இந்த கீரை உடலில் காணப்படும் அதிக அளவு வெப்பத்தை குறைக்கும். பித்தம் மற்றும் தலைச்சுற்று, மயக்கம் போன்ற பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை வாய்ந்தது.
இரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏதேனும் விஷம் இருந்தால் அதை முறிக்கும் திறன் வாய்ந்தது. குடற்புழுக்களை அழிக்கும்.
அகத்தி கீரையை அளவாக எடுத்து சாப்பிட்டு வந்தால் நோய்களை போக்கும். அளவுக்கு மீறி சாப்பிட்டு வந்தால் பேதி ஏற்படும். அளவாக சாப்பிட்டு வளம் பெறுவோம்.
மணத்தக்காளி கீரை:

இது வயிற்றுப்புண்களை போக்கும் திறன் வாய்ந்தது. குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும்.
இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகளை குறைக்கும்.
பாலக்கீரை:

இந்த கீரை உடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கலை குறைக்கும்.
இதை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் நோய்கள் எதுவும் வராமல் தடுக்கும்.
புளிச்சக்கீரை:

இந்த கீரை உடலுக்கு வளமை தரக்கூடியது. இந்த கீரையை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, இரத்தபேதி மற்றும் சீதபேதியை குறைக்கும்.

நித்திய கல்யாணி tamil maruthuva kurippu/nature health tips in tamil

நித்திய கல்யாணி





                                                    








மருத்துவக் குணங்கள்:   


நித்தியக் கல்யாணி நாடி நடையைச் சமப்படுத்தவும், சிறுநீர்ச் சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இது இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தாம். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். அரிய உள்ளடக்கங்கள் மேலும் இதில் உள்ள அஜ்மாலின் கூட முக்கியமானதுதான். ரவ்பேசின் செர்பென்டைன் ரிசெர்பைன் இது தவிர மருந்து செடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்து கிடைப்பதாலும் இப்பயிர் மருத்துவத் துறையின் வணிகத்தில் முக்கியத்துவம் அடைகிறது.

இதன் ஐந்தாறு பூவை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிதாகம், அதிமூத்திரம், உடல் பலவீனம், மிகு பசி, பசியின்மை தீரும்.

வேர்ச்சூரணம் 1 சிட்டிகை வெந்நீரில் 2, 3 முறை கொடுக்கச் சிறுநீர்ச் சர்க்கரை குறையும். நோய் கட்டுப்படும்.

கல்யாண முருங்கை மருத்துவக் குணங்கள்: tamil maruthuva kurippu/nature health tips in tamil




                                                 
kalyana murungai






மருத்துவக் குணங்கள்:

கல்யாண முருங்கை தமிழமெங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள். மிளகுக் கொடிகளைப் படரவிட இதை வளர்ப்பார்கள். காப்பிப் பயிர்களுக்கு இடையில் நிழலுக்காக வளப்பார்கள். இது சுமார் 85 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் அகன்றும் பெரிதாகவும் இருக்கும். இதன் மலர்கள் அதிக சிவப்பாக இருக்கும். இதன் இதழ்களை பெண்களின் உதடுகளுக்கு அக்காலத்தில் உவமையாக ஒப்பிடுவார்கள். உருட்டு விதைகளையும் முட்களையும் கொண்ட மென்மையான கட்டைகளையும் உடைய மரம். விதைகள் கருப்பாக இருக்கும். முருங்க மரம் என்றும் வழங்கப்பெறும். கட்டைகளை வெட்டி ஈரத்தில் நட்டால்
உயிர் பிடித்து வளரும். விதை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.

இது துவர்ப்பும் கசப்பும் கலந்த சுவையுடையது. இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது. பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றியாகவும், விதை மலமிளக்கி குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.

மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லி 10 நாள் சாப்பிட வலி தீரும்.

இதன் இலைச்சாறு 15 மி.லி. ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
இலைச் சாறு 50 மி.லி. தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.

இதன் இலைச்சாறு நாளும் 50 மி.லி. 40 நாள் குடித்து வர பெண் மலடு நீங்கி கருதரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும்.
இலையை நறுக்கி வெங்காயம் போட்டு தேங்காய், நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

இலைச் சாறு 30 மி.லி.யுடன் பூண்டுச்சாறு 30 மி.லி.சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும்.

60 மி.லி.இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை அருந்த பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.

இலைச் சாறு, தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி சிரங்கு தீரும்.

இலைச்சாறு 10 மி.லி.யுடன் வெந்நீர் 10 மி.லி. கலந்து குழந்தைக்கும் கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும்.

வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100 மி.லி. பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மி.லி. வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி வீக்கம் கரையும்.

சாறு 1 தேக்கரண்டி மோரில் கலந்து குடிக்க நீர்தாரை அலர்ஜி நீர் எரிச்சல் தீரும்.

இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.

கரிசலாங்கண்ணி karislankanni benifits

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது.
மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக  மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.


கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:

நீர்=85%
மாவுப்பொருள்=9.2%                                        
karisala kanni
karisala kanni
புரதம்=4.4%
கொழுப்பு=0.8%
கால்சியம்=62 யூனிட்
இரும்புத் தாது=8.9 யூனிட்
பாஸ்பரஸ்=4.62%
இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாறில்  உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:

உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும்.

கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும்.

உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும்.

புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும்.

ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது.

விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி  தோல் பிணிகளை குணமாக்கும்.

எலும்புகள் பலம் பெற bone strenght tamil maruthuva kurippu/nature health tips in tamil

எலும்புகள் பலம் பெற




                              









1. கொய்யாப்பழத்தை தினசரி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் எலும்புகளுக்கு பலம் உண்டாகும்.



2. கோபுரம் தாங்கி செடி வேரை பொடி செய்து கற்கண்டுடன் சேர்த்து காலை, மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.

3. முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை இரண்டையும் நன்கு காயவைத்து இடித்து சலித்த சூரணத்தை  இரண்டு கிராம் எடுத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குறையும்.

4.முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை இரண்டையும் நன்கு காயவைத்து இடித்து சலித்த சூரணத்தை  இரண்டு கிராம் எடுத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குறையும்.

சிவப்பாக குழந்தை பிறக்க tamil maruthuva kurippu/nature health tips in tamil

சிவப்பாக குழந்தை பிறக்க



          
child








கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப் பூவையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும்


புடலங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்கவைத்து 1-டம்ளர்  சூப்  குடிக்கவும்.


பீட்ருட்டை சிறிய துண்டுகளாக ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி கொத்தமல்லி இலை  , சிறிது உப்புஇ இரண்டு மிளகு சேர்த்து சூப் மாதிரி குடிக்கலாம்.

பீட்ருட்டை கொத்தமல்லி இலை, மிளகு சேர்த்து சூப் செய்து குடிக்கவும்.

அதிமதுரம் மருத்துவக் குணங்கள்:athimathuram benifits tamil maruthuva kurippu/nature health tips in tamil

அதிமதுரம்



     
அதிமதுரம் 


அதிமதுரம் 












மருத்துவக் குணங்கள்:

1. ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாம்.

2. அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். 

3. மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

4. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்தியாக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

5. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீ­ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

6. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

7. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

8. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்­ணீரில் சாப்பிட்டால் இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

9. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால் வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும். உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

10. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீ­ர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வறட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

11. அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

12. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்­ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

13. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

14. அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

15. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

முளைக்கீரை மருத்துவக் குணங்கள் mulaikeerai benifits tamil maruthuva kurippu/nature health tips in tamil


முளைக்கீரை


மருத்துவக் குணங்கள்:

1. முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவில் எங்கும் பயிரிடப்படும் ஒரு சிறந்த கீரையாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் இக்கீரை இதன் சுவைக்காகவும், மருத்துவச் சிறப்புக்காகவும் பயிரிடப்படுகிறது. மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது. உழுது பயிரிடப்பட்ட நிலங்களிலும், தாரிசு நிலங்களிலும் இக்கீரை சிறப்பாக வளரும் ஆற்றல் பெற்றது.

2. முளைக்கீரையும் தண்டுக்கீரையும் ஒன்றுதான் எனக் குறிப்பிடுகிறார்கள். இளம் நாற்றுக்களை முளைக்கீரை எனவும் வளர்ந்தனவற்றைத் தண்டுக்கீரை எனவும் குறிப்பிடப்படுகிறது.

3. முளைக்கீரை ஓர் குறுகிய காலப்பயிர். 45 நாட்கள் வரை வளரக் கூடிய கீரை. அதற்கு மேல் விட்டால் அந்தக் கீரையானது முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். இளங்கீரைகளையே பிடுங்கிப் பயன்படுத்த வேண்டும். தண்டுக் கீரையோயெனில் ஒரு நீண்ட நாள் பயிர். இது ஆறுமாத கீரை என அழைக்கப்பட்டாலும் 100-120 நாட்களுக்கு வளர்க்கலாம்.

4. 100 நாட்களுக்கு மேல் ஆனால் கூட தண்டுக் கீரையின் தண்டு சமைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். ஏறக்குறைய 100-லிருந்து 120 நாட்களுக்குட்பட்ட கீரைத் தண்டே மிகச் சிறப்புடையது. இக்கீரைத்தண்டு முளைக் கீரையைப் போல் வேகமாக வளராது. இளந்தண்டுகளில் அதிகக் கீரை இருக்காது.

5. செழிப்பான மண்ணில் வளரும் போது தண்டுகள் சிறிது கூட நார் இல்லாமல் சுவையாக இருக்கும். தண்டுக் கீரையின் இளங்கீரையைப் பிடுங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் அது நன்கு வளர்ந்தபின் பயன்படுத்தினால் தான் அதிகளவு சாப்பிடக்கூடிய தண்டு இலை முதலியன கிடைக்கும்.
எனவே தண்டுக் கீரையை நன்கு வளர்ந்தபின் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் முளைக்கீரையோயெனில் முதிராமல் இளமையிலேயே அதாவது ஏறக்குறைய 45 நாட்களுக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும்.

6. முளைக்கீரைக்கு இளங்கீரை என்ற மற்ற பெயரும் உண்டு. முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும். இக்கீரையை சமையல் செய்துண்ண நாவுக்கு ருசியைத்தரும். முளைக் கீரையை மற்றப் பருப்பு வகைகளுடன் சேர்த்துக் கூட்டாகவும், மசியலாகவும் செய்துண்ணலாம். இதனைப் பொறியல் செய்து சிறிது தேங்காய்த் துருவல் சேர்த்து உண்ண மிகச் சுவையாக இருக்கும்.

7. இக்கீரையில் உண்ணும் தகுதிபெற்ற பகுதி முழுச் செடியில் 39 விழுக்காடு ஆகும். முளைக்கீரையில் 85.7 விழுக்காடு நீரும், 4 விழுக்காடு புரதச்சத்தும், 0.5 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 2.7 விழுக்காடு தாதுப்புக்களும், ஒரு விழுக்காடு நார்ச் சத்தும், 6.3 விழுக்காடு மாவுச் சத்தும் நிறைந்துள்ளன.

8. இக்கீரை 46 கலோரி சக்தியைக் கொடுக்கக் கூடியது. நூறு கிராம் கீரையில் 397 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும், 247 மில்லி கிராம் மெக்னிசியமும், 772 மில்லி கிராம் ஆக்ஸாலிக் அமிலமும், 83 மில்லி கிராம் மணிச்சத்தும், 25.5 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 230 மில்லி கிராம் சோடியமும், 341 மில்லி கிராம் பொட்டாசியமும், 0.33 மில்லி கிராம் தாமிரச் சத்தும்எ 61 மில்லி கிராம் கந்தகச் சத்தும், 88 மில்லி கிராம் குளோரின் சத்தும் அமைந்திருக்கிறது.
இக்கீரை ஒன்றே எல்லாவிதமான தாதுப்புக்களையும் தன்னுள் அடக்கியுள்ளது என்பது தெள்ளத் தெளிந்த உண்மையாகும். இதனை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக் கொள்வதால் ஒரு பூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் கொடுக்கக் கூடியது.

9. இக்கீரையுள் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தைச் சுத்தி செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லன. மற்றும் இதிலடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுச் சத்தாகும். எலும்பினுள்ளே அமைந்துள்ள ஊண் அல்லது ‘மேதஸ்’ என்னும் மூளை வளர்ச்சிக்கு இம்முளைக் கீரையில் அமைந்துள்ள மணிச்சத்து பெரிதும் உதவுகின்றது.

10. முளைக்கீரை விதை, நன்கு உரமுள்ள நிலத்தில் நெருக்கமில்லாதபடி விதைத்து மேலே சிறிது மணலைத் தூவிவிடுதல் வேண்டும்.
இவ்வாறு விதைக்கப்பட்ட விதைகளின் மேல் வைக்கோலைப் போட்டு மூடி அதன் மீது பூவாளியைக் கொண்டு தண்ணீர் தெளிப்பது நல்லது. விதை விதைத்த உடனேயே தண்ணீர் தெளிப்பது மிகவும் முக்கியம். மூன்று நாட்களுக்குப் பிறகு மேலே மூடப்பட்ட வைக்கோலை நீக்கிவிட வேண்டும். நான்காம் நாள் விதைகள் நன்கு முளைத்துவிடும். முளைத்துவந்த செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் விடக்கூடாது.

11. விதைக்கப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்கு மழையில்லாமலிருப்பது நல்லது. அவ்வாறு மழை பெய்தால் முளைத்த கீரையெல்லாம் அழுகிக்கெட்டுப்போய் விடும். பதினைந்து நாட்கள் ஆன பிறகு வேண்டிய கீரைகளை அவ்வப்போது நெருக்கம் கலையும்படியாகச் சிறது சிறிதாகப் பிடுங்கிப் பயன்படுத்தலாம். களைகளை அகற்றி போதியளவு நீர்பாய்ச்சி வந்தால் 4 வாரத்திலிருந்தே கீரையைப் பிடுங்கிப் பயன்படுத்தத்தக்க நிலையை அடையும். 6 வாரத்தில் எல்லாக் கீரைகளையும் பறித்து விடலாம்.

12. உணவுக்காக கீரையைப் பறிக்கும் பொழுது கீரை பூக்குமுன் பறித்துவிடுதல் நல்லது. அப்போதுதான் கீரையின் தண்டு நார் இன்றி மென்மையாக இருக்கும். செடி பூத்துவிட்டால் தண்டுப் பாகம் முதிர்ந்து நார் பாய்ந்துவிடும். அடைமழை பெய்யும் காலம் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் இக்கீரையைப் பயிர் செய்யலாம்.

13. சிறுசிறு பாத்திகளில் ஆண்டு முழுவதும் பயிரிட்டுக்கொண்டே வரலாம். காலத்தே பறித்த முளைக்கீரையும் அதன் தண்டும் நாவுக்கு உருசியும், உடலுக்கு வலுவும் தருவதால் வீட்டுத் தோட்டத்தில் இக்கீரையைப் பயிரிட்டுப் பயன்பெறுவது சிறந்ததாகும்.

14. முளைக் கீரையானது சிறந்த மருத்துவக் குணங்களைப் பெற்றிருக்கிறது. இதை சமையல் செய்துண்ண நாவுக்கு உருசியைக் கொடுப்பதோடு நல்ல பசியையும் கொடுக்கக் கூடியது.

15. இக்கீரையை நன்கு ஆய்ந்து அலம்பிச் சுத்தப்படுத்தி பாத்திரத்திலிட்டு சிறிது அரிந்த வெங்காயத்துடன் பச்சை மிளகாயைக் கூட்டி உப்பிட்டுக் கடைந்து உட்கொண்டால் உட் சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குணமாகும். அத்துடன் கண் குளிர்ச்சியைப் பெறும்.

16. சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. 

மாதுளையின் பயன்கள் pomegranate fruit benifits tamil marathuvakurippu /nature health tips in tamil



வெயில் காலங்களில் கிடைத்திடும் ஒப்பற்ற மருத்துவக் குணமும்,இனிப்பும்,சுவையும் கொண்ட எல்லோரும் விரும்பும் பழம்  

மாதுளை.மேல் தோல் கடினமாக இருக்கும்.உள் தோல் வெண்மையாக இருக்கும்.முத்துக்களாக உள்ள பழம்.சிவப்பாக இருக்கும்.பழங்களின் இராணி என்றும் போற்றப்படுகிறது.இரத்தத்துடன் நேரடியாகக் கலக்கும் இரும்புத் தாதும்,சர்க்கரையும் மிகுந்த பழம்.



மாதுளை பழத்தில் உள்ள சத்துக்கள்:

நீர்=78%
மாவுப்பொருள்=15%                     
helth pro tamil

கொழுப்பு=0.1%
கால்சியம்=0.01%
பாஸ்பரஸ்=0.07%
இரும்புத்தாது=0.03 யூனிட்
வைட்டமின் C=16 யூனிட்
வைட்டமின் B2=10 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் மாதுளை பழச்சாறில் உள்ள சத்துக்கள்.

மருத்துவக் குணங்கள்:

மாதுளையில் எளிதில் ஜீரணிக்கும் சத்தும்,சர்க்கரையும் மிகுந்து உள்ளதால் பிணியாளர்கள்,குழந்தைகள் நல்ல பலன் பெறுவர்.வயிற்றுப் புண்,வயிற்று வலி,வயிற்று உளைச்சல்,ஜீரணக் கோளாறு,பசியின்மை போன்றவற்றை நீக்கும் உணவுச்சாறு.

மனதிற்கும்,உடலுக்கும் பூரிப்பும்,மகிழ்ச்சியும்,புத்துணர்வும் தரும் சாறு.
குளிர்ச்சியான பானம்,உடல் சூடு,மூலம்,கருப்பை சார்ந்த பிணிகள் நீங்கும்.இதயம் வலிமை அடையும்.

ஹீமோகுளோபினைக் கூட்டும் உயர்ந்த சாறு.

வயிறு உப்புசம்,காய்ச்சல்,மலேரியா,அம்மை கண்ட காலத்தில் இது நல்ல மருந்தாக உள்ளது.

மருத்துவக் குணங்கள்:

சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.

புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.

மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி 
கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.

ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.

ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

மாதுளம்பழத்தை உதிர்த்து ப்ரீசரில் வைத்துவிடுங்கள். பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் நன்றாக விறைத்துப்போய் உடைக்க சுலபமாக இருக்கும். இதை பவுடராக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் இந்த பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். 

குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வந்தால், பருக்கள் வராது.

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளம் பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.
கற்கண்டு, பன்னீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து கலந்து உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து சருமத்தை விட்டே விலகும்.
மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.
இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது.

மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது.

மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். 

Tuesday, 18 September 2018

முகப்பருக் குறைய face beauty benifits tamil marathuvakurippu /nature health tips in tamil

முகப்பருக் குறைய




                  


1. ஆடுதீண்டாப்பாளை இலையை எடுத்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். பசும் மஞ்சள், வசம்பு ஆகியவற்றை மையாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்து விழுதை ஆடுதீண்டாப்பாளை இலைச்சாற்றில் கலந்து ஒரு பாத்திரத்திலிட்டு மூடி வைக்கவேண்டும். மறுநாள் தேங்காய் எண்ணெயுடன் தயாரித்து வைத்திருக்கும் சாற்றை கலந்து காய்ச்ச வேண்டும். எண்ணெய் திடமாகித் தைலபதமாகும் போது இறக்கி ஆறவைத்து ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். 

2. முகத்தை நன்றாக சுத்தமாக கழுவித் துடைத்த பிறகு இந்த எண்ணெயை முகத்திலிட்டு நன்கு அழுந்தத் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பிறகு பயற்றம் மாவை முகத்தில் பூசி பின்பு முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு குறையும்.

3. சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால்  தோன்றிய தழும்புகள் குறையும்.

4. கறிவேப்பிலை,வெண்ணெய் இரண்டையும் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி குளித்து வர முகப்பரு குறையும்.

5.சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்

நொச்சி nochi thaliayin payangal benifits tamil marathuvakurippu /nature health tips in tamil

நொச்சி



                                                               
vitex 





மருத்துவக் குணங்கள்:

1. நொ‌ச்‌சி இலையை இடி‌த்து சாறு பி‌ழி‌ந்து க‌ட்டிக‌ளி‌ன் ‌மீது பூ‌சி வர க‌‌ட்டி கரையு‌ம். ‌வீ‌க்க‌ம் குறையு‌ம்.

2. நொ‌ச்‌சி, தழுதாழை, மா‌வில‌ங்க‌ம் ஆ‌கியவ‌ற்றை சம அளவு எடு‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து, ஒரு ஆழா‌க்கு எடு‌த்து அ‌‌தி‌ல் 35 ‌கிரா‌ம் பெரு‌ங்காய‌த்தை பொடி‌த்து‌ப் போ‌ட்டு‌க் கா‌ய்‌ச்சவும்.

3. அது குழ‌ம்பு பத‌த்‌தி‌ல் வ‌ந்தது‌ம் அ‌தி‌ல் ஒரு கர‌ண்டி ‌வீத‌ம் எடு‌த்து தொட‌ர்‌ந்து 10 நா‌ட்க‌ள் சா‌ப்‌பிட கு‌ன்ம‌ம் என‌ப்படு‌ம் அ‌ல்ச‌ர் வ‌யி‌ற்றுவ‌லி குணமாகு‌ம்.
நொ‌ச்‌சி மல‌ர்களை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி பொடி செ‌ய்து இர‌ண்டு ‌சி‌ட்டிகை அளவு எடு‌த்து பன‌ங்க‌ற்க‌ண்டு சே‌ர்‌த்து சா‌ப்‌பிட ர‌த்த பே‌தி, ர‌த்த வா‌ந்‌தி குணமாகு‌ம்.
நொ‌ச்‌சி இலையை ‌சி‌றிது ஆமண‌க்கு எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி ஒ‌த்தட‌ம் இட, மூ‌ட்டுவ‌லி, மூ‌ட்டு ‌வீ‌க்க‌ம் குறையு‌ம்.

4. நொ‌ச்‌சி‌க் கொ‌ழு‌ந்து, சு‌க்‌கு சே‌ர்‌த்து அரை‌த்து, அதனுட‌ன் ச‌ர்‌க்கரை, நெ‌ய் சே‌ர்‌த்து லே‌கிய‌ம் போல ‌கி‌ண்டி ஒரு ம‌ண்டல‌ம் உ‌ட்கொ‌ண்டு வர ‌சீத‌க்க‌ழி‌ச்ச‌லி‌னா‌ல் ஏ‌ற்படு‌ம் கடு‌ப்பு குணமாகு‌ம்.

மூலிகைப் பொருட்கள் benifits tamil marathuvakurippu /nature health tips in tamil

மூலிகைப் பொருட்கள்

 

                                        




   




கடுகுரோகிணி   
சுரத்திற்கு பயன்படும் கடுகுரோகிணி இமயமலையில் வளர்கிறது.
மேல்நாட்டு ஆல்ப்ஸ் மலையில் கடுகுரோகிணியை ஒத்த குணமுள்ள ஜென்சன் மூலிகை என்று கூறுவர். இதன் மறுபெயர் மஞ்சள் ஜென்சன் ஆகும்.

இதிலுள்ள மருந்து உப்புகள் அதிகம் நவீன மருத்துவ துறையில் பயன்படுகிறது.

இந்த மூலிகையின் ஒரு பிரிவிலிருந்துதான் நவீன மருத்துவத்துறையில் பயன்படும் வெளி உபயோக மருந்தான ஜென்சன் வயலெட் செய்கிறார்கள்.

இச்செடியானது கிழங்கு போன்ற கெட்டியான வேருடையது.
இமயமலைப்பகுதியில் ஏறத்தாழ 2700 முதல் 4500 மீட்டர் உயரத்தில் இயற்கையாகவும், பயரிட்டும் இவை வளர்கின்றன.

குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களிலும் இவை கிடைக்கின்றன.
இலைகள் சிறியதாக நீண்டு பட்டைக்கத்தி போன்ற தோற்றமளிக்கும்.
கடுகுரோகிணியின் பூவானது வெளுத்த மற்றும் இளம் நீல நிறங்களில் உள்ளன.

பழங்கள் முட்டை வடிவில் கேப்ஸ்யூல் போல் காட்சியளிக்கும். இச்செடியின் வேர்பகுதி மருத்துவக் குணம் கொண்டது.
குறிப்பு:

கடுகுரோகிணியின் கசப்பு சுவை குறைய மிளகு, பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மருந்து 1:

8 கிராம் சூரணத்தை அரை லிட்டர் நீர் விட்டு அரைக்கால் லிட்டர் கஷாயமாக்கி சர்க்கரை கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
மருந்து 2:

கடுகுரோகிணி, அதிமதூரம், முந்திரி ப‌ழம் ,வேப்பம் பட்டை 18 கிராம் ஆகியவற்றை
எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
கால் லிட்டர் கஷாயமாக தயார் செய்து காலை, மாலை 10 மில்லி லிட்டர் அளவு பருகி வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். ‌
மருந்து 3:

கடுகுரோகிணி, மிளகு, நாரத்தன் காய், சந்தனக்கட்டை, சீரகம் ஆகியவற்றை 4 கிராம் எடுத்து 300 மில்லி லிட்டர் கொதிக்கும் நீரில் போட்டு மூடி வைக்க வேண்டும்.
பின்பு இதனை வடிகட்டி 30 மில்லி லிட்டர் முதல் 60 மில்லி லிட்டர் வரை தினமும் இரண்டு  முதல் நான்கு வேளை சாப்பிட வேண்டும்.
அவ்வாறு சாப்பிட்டால் சுரம், வலிப்பு, வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவை குணமாகும்.
மருத்துவ குணங்கள்:

கடுகு ரோகிணியானது கசப்பு தன்மை வாய்ந்தது.
இவை அஜீரணம் போக்கும்.  மலச்சிக்கலைக் குணப்படுத்தும். ஆனால் இவை அதிக அளவில் பேதி உண்டாக்கும்.
காய்ச்சலைக் குணமாக்கும் பண்பை பெற்றிருப்பதால் மலேரியாவிற்கும், பித்த நீரை வெளிப்படுத்துவதால் மஞ்சள் காமாலைக்கும் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது.

சித்த ஆயுர்வேத முறைகளில் சுரம், பிரமேகம், காசம், வயிற்று கிருமி, தோல் சம்பந்தமான நோய்கள் ஆகிய நோய்களை குணமாக்க வல்லது.
யுனானி மருத்துவத்தில் சிறுநீர்க் கற்களைப் போக்கவும், வாந்தி செய்யவிக்கவும், பக்கவாதத்திற்கும் பயன்படுகிறது.
கண்பார்வையை அதிகமாக்க கண் மருந்துகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

உடல் பலவீனம், ஜீரண குறைவு, பசியின்மை ஆகியவற்றை நீக்கும்.
ஈரல் சம்பந்தமான நோய், நரம்பு சம்பந்தமான நோய் மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கு நல்லது.
உள் உறுப்பை சுத்தம் செய்வதுடன் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
இத்தகைய மருத்துவகுணம் கொண்ட கடுகுரோகிணியின் பயனை உணர்ந்து அதனை நம் அன்றாட உணவுடன் கலந்து உண்போம்; நோயின்றி வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

ஞாபக மறதி memory lose treatmant benifits tamil marathuvakurippu /nature health tips in tamil

ஞாபக மறதி குறைய


      
வல்லாரை 






ஆரைக்கீரை, வல்லாரை இலை மற்றும் மணத்தக்காளி இலை ஆகியவற்றை சிறிதாக வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை இடித்து போட்டு நீர் விட்டு ரசம் போல செய்து காலை, மாலை குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து ஞாபக மறதி குறையும்


வெண்ணீரில் தேனை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.


மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவைகளை  தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்

பல் நோய்கள் pali paramarippu palvali benifits tamil marathuvakurippu /nature health tips in tamil




     
health teeth








1. ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.


2.கருவேலம் பட்டை, கிராம்பு, மென்தால் ஆகியவற்றை இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.


3.பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.


4.முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறித்து நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும்.

5. பூந்தி கொட்டை, உப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து பல்பொடியுடன் சேர்த்து பல் தேய்த்து வந்தால் பல் நோய்கள் குறையும்.