முகப்பருக் குறைய
1. ஆடுதீண்டாப்பாளை இலையை எடுத்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். பசும் மஞ்சள், வசம்பு ஆகியவற்றை மையாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்து விழுதை ஆடுதீண்டாப்பாளை இலைச்சாற்றில் கலந்து ஒரு பாத்திரத்திலிட்டு மூடி வைக்கவேண்டும். மறுநாள் தேங்காய் எண்ணெயுடன் தயாரித்து வைத்திருக்கும் சாற்றை கலந்து காய்ச்ச வேண்டும். எண்ணெய் திடமாகித் தைலபதமாகும் போது இறக்கி ஆறவைத்து ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
2. முகத்தை நன்றாக சுத்தமாக கழுவித் துடைத்த பிறகு இந்த எண்ணெயை முகத்திலிட்டு நன்கு அழுந்தத் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பிறகு பயற்றம் மாவை முகத்தில் பூசி பின்பு முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு குறையும்.
3. சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய தழும்புகள் குறையும்.
4. கறிவேப்பிலை,வெண்ணெய் இரண்டையும் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி குளித்து வர முகப்பரு குறையும்.
5.சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்
1. ஆடுதீண்டாப்பாளை இலையை எடுத்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். பசும் மஞ்சள், வசம்பு ஆகியவற்றை மையாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்து விழுதை ஆடுதீண்டாப்பாளை இலைச்சாற்றில் கலந்து ஒரு பாத்திரத்திலிட்டு மூடி வைக்கவேண்டும். மறுநாள் தேங்காய் எண்ணெயுடன் தயாரித்து வைத்திருக்கும் சாற்றை கலந்து காய்ச்ச வேண்டும். எண்ணெய் திடமாகித் தைலபதமாகும் போது இறக்கி ஆறவைத்து ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
2. முகத்தை நன்றாக சுத்தமாக கழுவித் துடைத்த பிறகு இந்த எண்ணெயை முகத்திலிட்டு நன்கு அழுந்தத் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பிறகு பயற்றம் மாவை முகத்தில் பூசி பின்பு முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு குறையும்.
3. சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய தழும்புகள் குறையும்.
4. கறிவேப்பிலை,வெண்ணெய் இரண்டையும் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி குளித்து வர முகப்பரு குறையும்.
5.சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்
No comments:
Post a Comment