வெப்பம் மிகுந்த ஈரமான கால நிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன . இதற்கான நிலப்பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும் .
வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும் அது மற்ற வெப்ப மண்டல ஆப்பிரிக்கா தென் அமெரிக்க போன்றவற்றிற்கு பரவியது.
வாழை பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்ச நிலையில் நிற்பது நமது இந்தியாதான்.
வாழையின் மற்றுஒரு சிறப்பு என்னவென்றால் வாழை மரத்தின் அணைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ இலை , காய், தண்டு, கனி, நாற்பகுதி, என்று எதுவும் வீணாகாது.
வாழையின் பயன்கள் :
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும்.
3. காயம் தோல் புண்களுக்கு தேங்க எண்ணையை துணியில் நனைத்து புண் மேல் தடவி வாழை இலையை மேலே கட்டினால் புண் விரைவில் குணமாகும்.
4. சோரியாசிஸ் தோல் அழற்சி கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில வாழை இலையை கட்டினாள் குணமாகும்.
5. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லஎண்ணை பூசி வாழை இலையில் படுக்க வைத்து காலை சூரிய ஒளியில் கிடத்தினாள் வைட்டமின் டீ கிடைத்து , குழந்தைகள் குளுமையுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும் .
No comments:
Post a Comment