Tuesday, 25 September 2018

தேமல் நீங்குவதற்கு tamil maruthuva kurippu/nature health tips in tamil

1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?
முகப் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய, முகப்பரு நீங்க, கண்ணில் கருவளையம் நீங்க, தோல் வியாதிகள் குணமாக, உடல் பொன்னிறமாக, பற்கள் வெண்ணிறமாக என இதோ உங்களுக்கு உதவும் அழகுக் குறிப்புகள் அனைத்தும் இங்கே!

2. மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.

3. தோலில் சொறி, சிரங்கு, புண் இவற்றால் கரும்புள்ளிகள் உள்ளதா? கரும்புள்ளிகள் நீங்க குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர வேண்டும். ஒரு மாதத்திற்கு இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும். அழகு கூடும். ”குப்பை மேனி” இருந்தால் மேனியின் கரும்புள்ளிகளுக்கு நீங்கள் சொல்லலாம் ”குட்பை”.

4. பொன்னாங்கண்ணிக் கீரை நமது உடம்பை ”பொன்னாக” மாற்றும் சக்தி இதற்கு உண்டு. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய் விட்டு வதக்கி, மிளகும், உப்பும் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடல் அழகு பெறும்.

Saturday, 22 September 2018

மூலிகை பொடிகளின் பயன்கள் tamil maruthuva kurippu/nature health tips in tamil






       
milagai podi






1. அருகம்புல் பொடி  = அதிகமான உடல் எடையை குறைக்கும்.   கொழுப்புகளை குறைக்க கூடியது. நல்ல ரத்தத்தை சுத்திகரிக்க கூடியது.

2.  நெல்லிக்காயின் பொடி  =  பற்களும்  , எலும்புகளும்,  பலமாக இருக்கும்.  இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.

3. வில்வம் பொடி   =   ரத்த கொதிப்புக்கு சிறந்தது . கொழுப்பையும் குறைக்க கூடியது.

4. வல்லாரை பொடி  =  நினைவாற்றல் , நரம்பு  தளர்ச்சிக்கு நல்லது .

5. துளசி பொடி =  மூக்கடைப்பு , சுவாசத்தில் ஏற்படும்  கோளாறுகளுக்கு  சிறந்தது .

6. ஆவாரம்  பூ பொடி =   இதயம் பலமாக இருக்கும். மேனி பொன்னிறமாக மாறும்.

7. ரோஜா பூ பொடி  =   உடல் குளுர்ச்சிக்கும் ,  ரத்த கொதிப்பிற்கும்

8. ஜாதிக்காய் பொடி = நரம்பு தளர்ச்சி,  ஆண்மை பெருகும்.

9. வேப்பிலை பொடி =  குடிலில் உள்ள புழுக்கள் அழிக்கும்.  சர்க்கரை நோய்க்கும் மருந்தாக பயன் தரும்.

10. அதிமதுரம் பொடி =  வறட்டு இருமல் ,  குரல் வளத்திற்கும்  சிறந்தது .

11. கிரிசாலக்கண்ணி பொடி  =  காமாலை போக்கும் . கூந்தல் வளரும்.

12.  கீழா நெல்லி பொடி  =  மஞ்சள் காமாலை,   சோகை தனம் நீங்கும் .

13. பொன்னாக்கன்னி பொடி =  உடல் சூட்டை குறைக்கும்.  கண் சம்மந்தமான நோய்கள் தீரும்.

14.  வாழை தண்டு பொடி  =  கல் அடைப்புக்கும்,  சிறுநீரக நோய்க்கும் பலன் தரும்.

15. மணத்தக்காளி பொடி  =  வாய் புண் , தொண்டை புண்,  நீங்கும்.

16. மருதாணி பொடி =  கை , கால் , ஆகியவற்றில் பூசினால் பித்தம் , கபம் , குணமாகும் .

17. சோற்றுக்கற்றாழை  பொடி  =  முகம் பொலிவாகவும்,  உடல் குளிர்ச்சி ஆகவும் இருக்கும்.

தூது வளையின் மருத்துவ குணங்கள் tamil maruthuva kurippu/nature health tips in tamil



1. பசி எடுக்காதவர்கள்  இந்த கீரையை நெய் விட்டு வதக்கி அரைத்து  உணவில் சேர்த்து வந்தால் பசி தானாக எடுக்கும்.


2. இதனால் தலை பாரம், உடல் வலி , ஆகியவை நீங்கும்.

3.  துளசி சாரும் தூதுவளை  சாரும் சேர்த்து , 1 டம்ளர் பாலில் கலந்து ஒரு வரம் அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய், சளி , நீங்கும்.

4.  இந்த கீரை முக வசீகரம் ,  புத்தி தெளிவு உண்டாக்க கூடியது.

5.  வாய்வு நோய்களையும் சீர் படுத்த கூடியது தூது வளை .

Friday, 21 September 2018

எருக்கன் செடியின் மூலிகை பயன்கள் tamil maruthuva kurippu/nature health tips in tamil





vella earakku
1. தெய்வீக மூலிகை என போற்றப்படும் எருக்கு வளமற்ற நிலங்கள்
பராமரிக்கப்படாத வயல்கள் , சாலைஓரங்கள் , சுடுகாடு என எங்கும் விளையும்.

2. பனிரெண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும் கூட உயிர் வாழும் ஆற்றல் கொண்டது.

3. எருக்கின் இலை பூ, பட்டை, வேர் , என அனைத்திலும் மருத்துவ குணங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
இதன் இலை விஷ முறிவுக்கு பயன்படுகிறது .

4. 10 கிராம் இஞ்சி , வெள்ளெருக்கு பூக்கள் , 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி  1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு , 1/4 லிட்டர் ஆகும் வரை சுண்ட காய்ச்சி தினமும் இரண்டு வேலை குடித்து வந்தால் இரைப்பு குறையும்.

5. எருக்கன் பூவை காயவைத்து பொடியாக்கி கொள்ளவேண்டும். இந்த பொடியில் 200 கிராம் எடுத்து சிறது சர்க்கரை சேர்த்து இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் பால்வினை நோய், தொழு நோய் குணமாகும்.

6. எருக்கன் பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து .

இளநீரின் மருத்தவ குணம் tamil maruthuva kurippu/nature health tips in tamil



இளநீரில் உள்ள சத்துக்கள்

1.சோடியம் குளோரைடு
2. பொட்டாசியம்
3. தாது உப்புகள்                                  
4. நீர் சத்து
5. கால்சியம்
6.  வைட்டமின்

பயன்கள்
தினமும் இளநீர் சாப்பிட்டு வந்தால் அது நம்மை இளமையாக  வைத்து இருக்கும்.     இளநீரில் இருக்கும் உப்பு சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு மட்டுமின்றி உடலின் வெப்ப நிலையை உள்வாங்கி  சரிவர வெளியே தள்ளுகிறது .  குறிப்பாக கோடை காலத்தில் நல்ல பலன் கொடுக்க கூடியது .

இதய நோயாளியாளிகளுக்கு நல்ல இதமானது இளநீர்.

அத்தி பழத்தின் மருத்துவ குணங்கள் tamil maruthuva kurippu/nature health tips in tamil



அத்தி பழத்தின் சத்துக்கள்

1. நார்சத்து   5.8%
atthi palam
அத்தி பழம்

2. பொட்டாசியம்  3.3%                    

3. மாங்கனீசு  3%

4. வைட்டமின் பி6  3%

5. கால்சியம் 300 மில்லி கிராம்

6. இரும்பு 2 மில்லி கிராம்

7.புரதம் 2 கிராம்


பயன்கள்


1. அத்தி பட்டை, பிஞ்சு, காய், ஆகியவை சதை , நரம்பு , ஆகியவற்றை சுரங்க செய்யும் மருந்தாகவும் , பழம் மலமிளக்கியாகவும் ,  பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் பயன்படும்.<
2. அத்தி பால் 15 மில்லியுடன் வெண்ணை , சர்க்கரை கலந்து காலை மாலை கொடுத்து வர நீரழிவு , குருதி கலந்த வயிற்றுபோக்கு , பெரும்பாடு , சிறுநீரில் குருதி கலந்து போதல் , நரம்பு பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

3. அத்தி பழத்தை உலர்த்தி இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி காலை மாலை பாலில் உட்க்கொண்டாள் இதயம் வலுவாகும்.  ரத்தம் பெருகும்.

வாழையின் பயன்கள் : tamil maruthuva kurippu/nature health tips in tamil





வெப்பம் மிகுந்த ஈரமான கால நிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன . இதற்கான நிலப்பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும் .

வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும் அது மற்ற வெப்ப மண்டல ஆப்பிரிக்கா தென் அமெரிக்க போன்றவற்றிற்கு பரவியது.

வாழை பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்ச நிலையில் நிற்பது நமது இந்தியாதான்.

வாழையின் மற்றுஒரு சிறப்பு என்னவென்றால் வாழை மரத்தின் அணைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது.   பூ இலை , காய், தண்டு, கனி, நாற்பகுதி, என்று எதுவும் வீணாகாது.

வாழையின்  பயன்கள் :

1.  வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும்.

3. காயம் தோல் புண்களுக்கு தேங்க எண்ணையை துணியில் நனைத்து  புண் மேல் தடவி வாழை இலையை  மேலே கட்டினால் புண் விரைவில் குணமாகும்.
4.  சோரியாசிஸ்  தோல் அழற்சி கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில வாழை இலையை கட்டினாள் குணமாகும்.

5. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லஎண்ணை  பூசி வாழை இலையில் படுக்க வைத்து காலை சூரிய ஒளியில் கிடத்தினாள் வைட்டமின் டீ கிடைத்து , குழந்தைகள் குளுமையுடனும்  ஆரோக்கியமாகவும் இருக்கும் .

Thursday, 20 September 2018

முதுகு வலி குறைய latest tamil maruthuva kurippu/nature health tips in tamil


vettrili

   
1.  மிளகு, கிராம்பு மற்றும் சுக்கு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து தினமும் 2 வேளைகள் குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.

2. வெற்றிலைகளை எடுத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி மற்றும் முதுகு வலி குறையும்.

3. வாதநாராயணன் இலைகளை  எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி முதுகில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலி குறையும்.

உடல் எடை குறைய எளிமையான வழிகள் tamil maruthuva kurippu/nature health tips in tamil


pappaya




1. பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


சுக்கை தோல் நீக்கி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 500 மி.லி இளநீர் விட்டு 12 மணி நேரம் ஊற வைத்து சுக்கை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும். மிளகை தூய நீரில் போட்டு கழுவி எடுத்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி பசும்பாலை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.

திப்பிலியை தூய நீரில் கழுவி மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி எடுத்து நன்றாக இடித்து சலித்து கொள்ளவும்.

அதிமதுரத்தை ஒன்றிரண்டாக தட்டி மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி தூய நீர் விட்டு நீர் பாதியளவு சுண்டும் அளவுக்கு எரித்து அதிமதுரத்தை எடுத்து நிழலில் உலர்த்தி நன்றாக இடித்து சலித்து கொள்ளவும்.
நிலவேம்பை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு புழுங்கலரிசி கழுநீரை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
இந்துப்பை இடித்து கொள்ளவும்.

இடித்து சலித்து வைத்த அனைத்தையும் ஒரு மண் பானையில் போட்டு நன்கு கலந்து மண் தட்டால் மூடி பானையை 6 மணி நேரம் கடும் வெயிலில் வைத்து எடுத்து மீண்டும் நன்றாக கலந்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.


உபயோகிக்கும் முறை:


6 கிராம் அளவு மருந்தை 3 பங்காக பிரித்து காலை, பகல், இரவு என 3 வேளைகள் உணவுக்கு 1 மணி நேரம்முன்னதாக ஒவ்வொறு பங்கை சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வரவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
இந்த சூரணத்தை சாப்பிட போகும் ஒரு நாள் முன்னதாக சுகபேதி அருந்தவும். சுகபேதி அன்று மட்டும் பசும்பாலும், சோறும் அல்லது மோரும் சோறும் மட்டும் சாப்பிடவும். அடுத்த நாள் மருந்தை சாப்பிடவும்.
சாப்பிட கூடாதவை:

இந்த சூரணம், சாப்பிட்டு வரும் போது உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கடலை பருப்பு, மொச்சை, அகத்திக்கீரை, பூசணி, பரங்கிக்காய், பச்சரிசி, குளிர்ந்த பானங்கள், இறைச்சி வகைகள், பிஸ்கட் வகைகள், தயிர், இளநீர் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.
சாப்பிட கூடியவை:

மிளகு பொங்கல், துவரை,முளைக்கீரை, புளி, மிளகாய், துவரை, புழுங்கலரிசி, சாம்பார், மோர், வத்தக்குழம்பு ஆகியவற்றை சாப்பிடலாம். வெந்நீர் குடித்து வருதல் மற்றும் வெந்நீர்ல் குளித்து வருதல் மிகவும் சிறந்தது.

குறிப்பு:


இந்த மருந்து சாப்பிடும் நாட்களில் 3 முறைகளுக்கு மேல் மலங்கழிந்தால் ஒவ்வொறு வேளை மருந்துடனும் அரை தேக்கரண்டி தேனை கலந்து கொள்ளவும்.

மலச்சிக்கல் ஏற்படாது. அப்படி ஏற்பட்டால் உணவில் சிறிது கீரைகளை கூட்டி சாப்பிடவும்.

உதடு சிவப்பாக மாற tamil maruthuva kurippu/nature health tips in tamil



lemon
எலுமிச்சை 



1.கடுகு, எலுமிச்சை பழச்சாறு, ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவவும்.


2. கடுகு, எலுமிச்சை பழச்சாறு, ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

3.புதினா, கொத்தமல்லி இலையை  அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும்.

ஏலக்காய் பலவிதமான பயன்கள் tamil maruthuva kurippu/nature health tips in tamil




ellakkai
ஏலக்காய்




மருத்துவக் குணங்கள்:




1.பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம். ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.


2.நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

3.வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

4. சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.
இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

5. ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.
ஈரப்பதம் புரதம் மாவுப்பொருள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.

6. ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி.
இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

7.நறுஞ்சுவையும் நறுமணமும் உள்ள மருந்துப்பொருள் ஏலக்காய் இதன் காரணத்தால் மருந்துத் தயாரிப்பாளர்கள் பலரும் பயன்படுத்தி நோய்கள் விரைந்து குணமாகவும் உடலுறுப்புகளை தூண்டிவிடவும் பயன்படுத்துகின்றனர்.

8.நாம் குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.

9. ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும்.


10.இதே போல ஏலக்காயை ‘சூயிங்கம்’மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.சிலர் வாயிலிருந்து முடை நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாத படி வாய் நாற்றம் தூக்கி அடிக்கும். இவர்களும் ஏலக்காய் மெல்லலாம்.

11.நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

12.அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5, 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.

Wednesday, 19 September 2018

யோகாவின் நன்மைகள் tamil maruthuva kurippu/nature health tips in tamil




விரல்களின் முத்திரையில் வியாதிகள் தீரும்


நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம். இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.


yoga muthira



கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன. சிந்தனைச் சக்தி தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும்

. தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும். மூட்டு வலி குணமாக வாயு முத்திரை! மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும். இதன்படி தியானம் செய்தால் வலிகள் குணமாகும். 

காது நன்கு கேட்க! காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும். சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை! மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். 


உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும். இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை! இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள்,

 உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும். கொழுப்பு கரைய சூரிய முத்திரை! உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும். கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை! நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். 

கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும். 

எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ தேவையில்லை. இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும், மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும். 

எண்ணெய் வகைகள் tamil maruthuva kurippu/nature health tips in tamil

எண்ணெய் வகைகள்

கற்பூரத் தைலம்

தேவையான பொருட்கள்:

கற்பூரம்.
தேங்காய் எண்ணெய் அல்லது
நல்லெண்ணெய்.
செய்முறை:

ஓர் அவுன்ஸ் கற்பூர பொடியை நான்கு அவுன்ஸ் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து நன்கு கலக்கினால் கற்பூரத் தைலம் ஆகிவிடும்.
உபயோகிக்கும் முறை:

இந்த தைலத்தை பத்து பதினைந்து நொடிகளில் நன்கு அழுத்தித் தேய்த்து வரவேண்டும்.
தீரும் நோய்கள்:

வாதம், முளிகளில் உண்டாகும்  வலி ஆகியவைகள் குறையும்.

கரன் எண்ணெய்

தேவையான பொருட்கள்:

ஆளி விதை எண்ணெய்.
சுண்ணாம்பு நீர்.
செய்முறை:

ஆளி விதை எண்ணெய், சுண்ணாம்பு நீரும் சேர்த்துக் குலுக்கினால் கரன் எண்ணெய் ஆகிவிடும்.
தீரும் நோய்கள்:

நெருப்புப்பட்ட புண்களுக்கு இந்த எண்ணெயை போட்டு வந்தால் தீப்பட்டப் புண்கள் குறையும்.

ஆமணக்கு

  மருத்துவக் குணங்கள்:

ஆமணக்கு மரம் 5 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. மடல்களைக் கொண்ட இதன் இலைகள் பெரியதாக அகலமாக இருக்கும். இதன் கொட்டைகள் சாம்பல், கறுப்பு அல்லது பல நிறத்துடன் கோழி முட்டை வடிவில் இருக்கும். இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ முதலான நாடுகளில் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது.

கை வடிவமான பெரிய மடல் போன்ற இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இவை பெரிதாகவும், அகன்றும், மேற்பகுதி வட்டமாகவும், தாவரத்தின் நுனியில் பெரிய கொத்தாகவும் காணப்படும். சாம்பல் நிறமான பூச்சுடைய, பத்து அடி வரை உயரமாக வளரக்கூடிய தாவரம்.

எளிதில் உடையக்கூடிய தண்டை உடையது. முட்களுடன் கூடிய காய்கள் காய்க்கும். இவை காய்ந்தால் வெடிக்கும் தன்மையுடையது. பழங்கள் கூர்மையான ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. விதைகள் நீள்வட்டமானவை. ஏரண்டம், சித்திரம், தலரூபம் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஆமணக்கிற்கு உண்டு.

கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும். ‘சித்திரகம்’, ‘ஏரண்டம்’ என்பன இதன் வேறுபெயர்களாக நிகண்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.
குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். ஆமணக்குச் செடியின் முக்கியப் பயன்பாடாக அமைவது இதன் காய்கள்தான். காய்கள் பச்சை நிறமாக இருக்கும். அவை முற்றியதும் வெளிறிய வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும்.

ஆங்காங்கே கூர்மையாக முள் போன்று இருக்கும். வெயிலில் காயப்போட்டால் காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிப்படும். இவ்விதைகளையே, ‘ஆமணக்கு முத்து’, ‘ஆமணக்கங் கொட்டை’ என்பர். இவ்விதைகளிலிருந்தே விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இதன் கொட்டை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்காக (முத்துக்கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய்) வயல்வெளிகளின் ஓரங்களிலும் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலும் வளர்க்கப்படுகிறது. விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது.

இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை. இதில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செவ்வாமணக்கு ஆகிய மூன்று முக்கிய வகைகள் உள்ளன.

இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை கசப்பு சுவையும், வெப்பத்தன்தையும் கொண்டவை. இலையானது வீக்கம், கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும் தாய்ப்பால் பெருக்கும். வேர், வாத நோய்களைக் குணமாக்கும். விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றை போக்கும்.

எண்ணெய் மலமிளக்கும், வறட்சியகற்றும். பச்சிளம் குழந்தைகளை தாய் போல வளர்க்கும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விளக்கெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் ஆமணக்கு முத்து, மன்னராட்சிக் காலத்தில் வரிவிதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதை, ‘ஆமணக்கங் கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி (பெரிய மூடை) ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் (சிறிய மூடை) ஒன்றுக்குக் காசு காலும்’ என்று கி.பி. 1300ஆம் ஆண்டு பிரான்மலைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

பதநீரைக் காய்ச்சிக் கருப்பட்டி தயாரிக்கும்போது, பொங்கிவரும் பதநீர் கீழே வடியாமல் தடுக்க, பதநீர் பொங்கும்போது, ஆமணக்கு முத்துகளைப் போடுவர். இதனால் பாத்திரத்தின் விளிம்பிற்கு வெளியே பதநீர் வராது.
திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனையிலும் கோட்டைகளிலும் இரவில் எரியும் தீப்பந்தங்கள் விளக்கெண்ணெய் ஊற்றியே எரிக்கப்பட்டன என்றும் தேவையான எண்ணெயை இலவசமாக வழங்குவது குடிமக்களின் பொறுப்பு என்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலியார் ஓலைகள் குறிப்பிடுகின்றன.

கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்றவை பயிரிடும்போது, வரப்பைச் சுற்றிலும் ஆமணக்கு முத்துகளை ஊன்றிவைப்பர். காற்றைத் தடுக்கும் வேலி போல் இது அமையும். மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர்.

ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையிலேயே இவ்வாறு வளர்க்கின்றனர். யோனா என்ற தீர்க்கதரிசிக்கு நிழல் தருவதற்குப் பயன்படும்படி ஆமணக்குச் செடியை ஆண்டவர் வழங்கியதாக விவிலியம் குறிப்பிடுகிறது.

ஆமணக்கு முத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெ யானது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. இதன் வழவழப்பான தன்மையினால் மசகு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது, மாட்டு வண்டிகளில் சக்கரங்கள் சுழலும்போது, அச்சுப் பகுதியில் ஏற்படும் உராய்வைத் தடுக்க, வைக்கோலை எரித்து அதன் சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து மைபோலாக்கி அச்சுப் பகுதியில் தடவுவர்.

இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ‘கிரிஸ்’ ஆகும். இவ்வழவழப்புத் தன்மை யின் காரணமாகத்தான் பால் கறக்கும்போது, மாட்டின் மடுக்காம்புகளில் விளக்கெண்ணெயைத் தடவுவது வழக்கம். இதனால் மாட்டின் மடுவிலுள்ள காம்புகளில் கீறலோ வடுவோ விழுவது தடுக்கப்படும்.
விளக்கெண்ணெயின் வழவழப்புத் தன்மையின் அடிப்படையில் எதிலும் உறுதியான முடிவெடுக்காமல் இருப்போரைக் குறிக்க ‘சரியான விளக்கெண்ணெய்’ என்னும் சொல்லாட்சி இன்றும் வழக்கிலுள்ளது.