Tuesday, 18 September 2018

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம் 


மேனி பளபளப்பாக‌


தேவையான பொருள்கள்:

கேரட்.
பால்.
செய்முறை:

கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.

மணலிக்கீரை


மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.
மலச்சிக்கல் குணமாக:

மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
ஞாபக சக்தி பெருக:

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.
குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய:

மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.
மூளை நரம்புகள் பலம்பெற:

மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.
ஈரல் பலம்பெற:

மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.
இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வாழ்வில் வளம் பெறுவோம்.

நீர் பிரம்மி செடி

மருத்துவக்குணங்கள்

நீர் பிரம்மி:

நீர் பிரம்மி செடியில் ஆல்கலாய்டுகளும், குளுக்கோசைடுகளும் உள்ளன.  இவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
நினைவாற்றலைத் தூண்ட:

நீர் பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:

நீர் பிரம்மி இலையை நிழலில் உலர்த்தி கஷாயம் தயார் செய்து அருந்தினால் நரம்பு தளர்ச்சி மற்றும்  மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.  மேலும் சிறுநீர் பெருக்கம் ஏற்படும்.
தொண்டை கரகரப்பு குணமாக:

நீர் பிரம்மி இலையை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
கோழைக்கட்டு குணமாக:

நாீர் பிரம்மி வேரை அரைத்து நீர் சேர்த்து கொதிக்க வைத்து நெஞ்சில் தடவினால் கோழைக்கட்டு நீங்கும்.
வீக்கங்கள்  கரைய:

நீர் பிரம்மி இலையை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களின் மீது  ஒற்றடமிட்டுஅதன்மீது வைத்துக் கட்டினால் வீக்கங்கள் கரையும்.
இத்தகைய மருத்துவக்குணங்களைக்கொண்ட நீர் பிரம்மி செடியை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்;  வாழ்வில் வளம் பெறுவோம்.
வயிற்றுவலி தீருவதற்கு

தேவையான பொருள்கள்:

மருதம்இலை
பால்


வயிறு வலி
செய்முறை:

மருதம் இலையை அரைத்து ஒ‌ரு கிராம் அளவு எடுத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர நாட்பட்ட வயிற்று வலி குணமாகும்.
நீர்கடுப்பு குறைய

வெங்காயம்:

வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.



சிறுநீர் எரிச்சல்
தேவையான பொருள்:

வெங்காயம்
தண்ணீர்
செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். அல்லது வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம்.

தாழம்பூ மணப்பாகு


தேவையான பொருள்கள்:

தாழம் பூ
நீர்
சர்க்கரை
செய்முறை:

தாழம்பூவை  சிறியதாக நறுக்கி நீர் விட்டு காய்ச்ச வேண்டும்.
நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பாகுபாதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
இதேபோன்று தாழம்பூ வேரினை பயன்படுத்தியும் செய்யலாம்.
மருத்துவக்குணங்கள்:

இவ்வாறு தாழம்பூ மணப்பாகினை அருந்துவதால் உடல்சூடு தணியும். பித்தம் குறையும் அதிகளவில் சிறுநீர் வெளியாவதை  தடுக்கலாம்.
தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வந்தால் அம்மைநோய் வராமல் தடுக்கலாம்.
தாழம்பு வேரினை கொண்டு தயாரித்த மணப்பாகினை உட்கொள்வதால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.







No comments:

Post a Comment